துணிவு!

துணிந்து செல்லுதல்!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:54-55.  

54  அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

55  அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  

தொடர்ந்து செல்லும் துணிவை அங்கே,  

தூயோன் பேதுருவிடம் கண்டோம்.  

கிடந்தது தேம்பி அழுது நிற்காமல்,  

கிறித்துவைத் தொடரும் நிலை கண்டோம்.   

இடர் நிறைந்த இடங்களிலெல்லாம்,  

எப்படி இயேசுவின் பின் செல்வோம்? 

சுடரொளியாய் வெளிச்சம் தருவார்;  

சுட்டும் வழியில்  நாம் செல்வோம்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply