தாழ்த்துவோம், வாழ்த்துவார்!

தாழ்த்துவோம், வாழ்த்துவார்!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:13-14.

13  ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

14  அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

ஆயம் வாங்கும் அலுவலர் ஒருவர்,

ஆண்டவர் கோயில் முன் நின்று,

மாயம் நிறைந்த மனதை உணர்ந்து,

மன்னிப்பிற்குத் தாழ்த்துகிறார்.

சாயம்பூசிச் சாவினை மறைத்து, 

சரிதான் என்கிற நாம் இன்று,

காயம் ஏற்று கனியும் அவர்முன்,

கசியும்போது வாழ்த்துகிறார்!

ஆமென்.

Leave a Reply