தமக்கு என்றால்…..

உதவாது ஒளிந்தால்….

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:31-32.

31அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
32அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.

கிறித்துவில் வாழ்வு:
தமக்குத் தேவை எனும்போது,
தாழ்ந்து பலரிடம் கேட்போரும்,
நமக்குத் துன்பம் வரும்போது,
நயந்து நன்மை செய்வதில்லை.
எமக்கு யார்தான் உதவிடுவார்,
என்று ஏங்கும் எழையரே,
உமக்கு ஒன்றும் செய்யாமல்,
ஒளிவோர் எவரும் உய்வதில்லை!
ஆமென்.

Leave a Reply