தன்னை உயர்வாய் எண்ணும் தன்மை!

தன்னை மேலோன் என்னும் எண்ணம்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:15.
15  அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. 
கிறித்துவில் வாழ்வு:
தன்னை உயர்வாய் எண்ணும் தன்மை,

தவறு என்று உணர்ந்தவர் யார்?
என்னைப் போலப் பிறரைப் படைத்த,
இறையின் வாக்கைக் கேட்பவர் யார்?
முன்னர் நிற்கும் மனிதர் முகத்தில்,
மும்மை தெய்வச் சாயலைப் பார்.
இன்னாள் இதனை ஏற்கா மனிதர்,
இகழ்வடையும் காட்சியும் பார்!
ஆமென்.

Leave a Reply