தண்டனைத் தீர்ப்பு!

தவற்றின் முடிவு தண்டனை!
நற்செய்தி: யோவான் 3:18.  

நல்வழி: 
தவற்றின் முடிவு தண்டனை என்று, 
தவறிக்கூட நினைக்காது, 
இவற்றில் அன்பு எங்கே என்று, 
இன்றைய மாந்தர் கேட்கின்றார். 
அவற்றை அறிந்த ஆண்டவர் அன்று, 
அருமை மகனையே பலிதந்து, 
சிவப்புக் குருதி வழியாய் இன்று,  
சீர்பெற நம்மை மீட்கின்றார்! 
ஆமென். 
-செல்லையா. 

Leave a Reply