கொடுப்போமே!

கொடுப்போமே! 

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:21-26.  

21  அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.

22  இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

23  அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?

24  ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.

25  அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

26  அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.  

கிறித்துவில் வாழ்வு: 

உரியவருக்கு உரியவை எவையோ, 

ஒருகுறை வராமற் கொடுப்போமே. 

வரியென வாங்கும் அரசின் தீர்வை  

வன்மை எனினும் கொடுப்போமே. 

சரியெது தவறெது காட்டும் இறைக்கு,  

சரிவர அனைத்தும் கொடுப்போமே.

நெறியிதை அறிந்து நேர்மையில் வாழ,

நெஞ்சை இன்றே கொடுப்போமே!  

ஆமென்.

Leave a Reply