கொடிய தொற்று!

கொல்லும் தொற்று!

பல்வகைத் தொற்று பார்த்த எனக்கு,

பரவும் கொரோனா பொருட்டல்ல.

இல்லம் பூட்டி அடைந்து கிடக்க,

இப்பகல் வேளை இருட்டுமல்ல.

சொல்லும் ஊரார் சுற்றுகின்றாரே,

சொல்லின் விளைவு புரியாமல்.

கொல்லும் தொற்று கீழ்ப்படியாமையே;

கொண்டோர் அழிகிறார் அறியாமல்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply