குள்ளமும் கள்ளமும்!

குள்ளமும் கள்ளமும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:1-4.

1   அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,

2   ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,

3   இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,

4   அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.

கிறித்துவில் வாழ்வு:

குள்ளமென்ற அளவினைக் கண்டு,

குறை சொன்னேனென வருத்தமுண்டு.

உள்ளங்காணா மனிதனைக் கொண்டு,

ஊர் விளங்காதெனக் கருத்துமுண்டு.

கள்ள நெஞ்சு இருப்பதைக் கண்டு, 

கழுவித் துடைத்தேன், திருத்தமுண்டு. 

வெள்ளமாகும் வாக்கினைக் கொண்டு,

வெளுப்பதுதானே பொருத்தமுண்டு!

ஆமென்.

Leave a Reply