குற்றமில்லை!

குற்றமில்லை என்றறிந்தும்….

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:4.  

4   அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.  

கிறித்துவில் வாழ்வு:  
குற்றம் இல்லை என்று தெரிந்தும்,  
கொடுக்க மாட்டார் விடுதலை.  
சுற்றம் கேட்கும் தீர்ப்பினையே, 
சொல்லிச் சேர்ப்பார் கெடுதலை.  
விற்றுச் செல்லும் நடுவர் இருப்பின்,  
வீழ்ந்து விடுமே அத்துறை. 
கற்றறிந்தோர்கள் தவறு திருத்தின்,   
காண்பார் அவரில் திருமறை!  
ஆமென்.

Leave a Reply