குருட்டுக் கண்கள்!

குருட்டுக் கண்கள்!  
இருட்டை இருட்டாய்ப் பார்க்காமல் 
இதுதான் பகலின் விளக்கென்றார்.  
திருட்டைத்  திருட்டாய் நோக்காமல்,  
திறமை என்றும் அளக்கின்றார். 
குருட்டுக் கண்கள்  உடையவர்தான்,  
கொடுமைத் தீர்ப்பு எழுதிடுவார்.  
விரட்டும் விருப்பும் இங்கில்லை;
விண்ணின் தீர்ப்பில் அழுதிடுவார்!  

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply