கிறித்து பிறப்பு!

கிறித்து பிறப்பு வாழ்த்துகள்!


பிறப்பின் நோக்கம் புரியாமல்,

பேசித் திரியும் மாந்தரினை,

இறப்பின் வழியாய் மீட்பதற்கு,

இறையே மகனாய், புவி வந்தார்.

திறப்பின் வாசல் எதுவென்று,

தெரிந்து நடக்கும் அடியவரை,

சிறப்பின் வாழ்வில் சேர்ப்பதற்கு,

சிறுமையாகியே தமைத் தந்தார்!


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply