கிறித்துவால் இணைகிறோம்!

கிறித்துவால் இணைகிறோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:17-19.
17 பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.
18 அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பார்க்க விரும்பி வந்தவருண்டு;
பரமனின் செயலைப் பார்த்ததுமுண்டு.
தீர்க்க விரும்பி வந்தவருண்டு.
தீரா நோய், வினை தீர்த்ததுமுண்டு.
சேர்க்க விரும்பிச் சேர்ந்தவருண்டு;
செல்வ அருளைச் சேர்த்ததுமுண்டு.
கோர்க்க இயன்றவர் யார் இங்கு உண்டு?
கிறித்துவே இறையுடன் கோர்க்கிறார் இன்று!
ஆமென்.

Image may contain: text

Leave a Reply