கழுகின் பார்வை!

கழுகின் பார்வை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:34-37.

34  அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.

35  திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.

36  வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

37  அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

மலைமேல் வாழும் கழுகின் கண்கள்,

மண்ணில் உணவைக் காண்பதுபோல்,

தொலைநோக்கோடு நாமும் பார்த்தால்,

தூயவர் அரசைக் கண்டிடுவோம்.

அலைபோல் இழுக்கும் அவரது வருகை,

அறியா நேரம் என்பதனால்,

இலைமேல் நீராய் இனியிருக்காமல்,

இயேசைப் பற்றிக் கொண்டிடுவோம்!

ஆமென்.

Leave a Reply