கல்லில் ஈரம்!

கல்லில் ஈரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:8-9.

8   சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

9   இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.

கிறித்த்துவில் வாழ்வு:

இல்லில் இன்று இயேசு வந்தால்,

என்னவாகும் உள்ளம்?

நெல்லில் உள்ள பதரைப்போல, 

நீக்குவாரே கள்ளம்.

சொல்லில் காணும் நன்மை யாவும்,

செயலாகுமோ கூறும்?

கல்லில் உள்ள நீரைப்போல,

கனிவதையும் பாரும்!

ஆமென்.

Leave a Reply