கல்லறை ஓன்று புதிதாய் இருக்கும்….

கல்லறை ஓன்று புதிதாய் இருக்கும்….
நற்செய்தி மாலை: மாற்கு 15:46-47.
“யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
சில்லறை எதுவும் சேர்க்கா இயேசு,
சேரும் இடத்தைப் பாருங்களே.
கல்லறை ஒன்று புதிதாய் இருக்கும்
காட்சியும் காண, வாருங்களே.
நல்லவர் இறப்பும் நன்கு முடியும்;
நன்றியில் நினைவு கூருங்களே.
எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும்,
இறைவனின் அரசில் சேருங்களே!
ஆமென்.

Image may contain: outdoor and nature

Leave a Reply