கணக்கு!

தருவரிடத்து கணக்கைக் காட்டு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:15.

15  அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.  

கிறித்துவில் வாழ்வு:
வருமானத்தின் கணக்கைப் பார்த்து,
வறுமை என்று எழுதும் நாம்,
தருவாரிடத்து உண்மைக் கணக்கு,
தரும் நாள் வருவதை அறிவோமா?
பெருநாளன்று மகிழ்வது போன்று,
பிறர்க்கு உதவும் நம் கணக்கு,
ஒரு நாள் நம்மை நிமிரச் செய்யும்;
உண்மையில் உதவி புரிவோமா?
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com

Leave a Reply