கடனும் கடமையும்!

கடனும் கடமையும்!

கடன் வாங்கும் அறிவில் சிறந்தவர் நாம்;

உடன் தீர்க்கும் வழியை மறந்ததும் நாம்!

படம் பார்த்து மயங்கி தேர்வு செய்தால்,

அடமானம் போகும் தமிழகமாம்!

-கெர்சோம் செல்லையா.

“நகராட்சி, உள்ளாட்சிகளின் கடன், அரசு நிறுவனங்களின் கடன் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து தமிழக அரசின் கடனாக நாம் எடுத்துக்கொண்டால், அரசின் மொத்தக் கடன் நிலுவை 2015-16-ல் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும்.
இது தமிழக அரசின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு. பெருகும் இந்தக் கடனை எப்படிக் குறைப்பது, நகர உள்ளாட்சிகளின் கடனை எவ்வாறு சீரமைப்பது, மின்சார நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் கடனை எவ்வாறு குறைப்பது என்று தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இது. நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்!”-

தமிழ் இந்து தலையங்கம் 05-04-2016.

Gershom Chelliah's photo.

Leave a Reply