ஓய்வு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:54-56.

கிறித்துவில் வாழ்வு: 
அச்சம் கொண்ட அடியார் அன்று, 
ஆண்டவர் ஏசுவைக் கைவிடவே,  
துச்சம் என்று துணிந்தோர் வந்து,  
தூயனை அடக்கம் செய்திட்டார். 
மிச்சம் இருந்த பெண்கள் நின்று, 
மீதிப் பணிகள் செய்திடவே, 
பச்சைச் செடிகள் படர்ந்த காவில், 
பரனும் ஓய்வு எய்திட்டார்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply