ஏன் இந்தத் துன்பம்?
நற்செய்தி: யோவான் 5:14-16.
நல்வழி:
ஐந்து விண்மீன் அறையெடுத்து,
ஆடிப் பாடிக் குரல் கொடுத்து,
இந்த நாளில் நாம் நடித்தால்,
இறைப்பணி அல்ல, நண்பர்களே.
அந்த நாளில் கிறித்துவிற்கு,
அவரது அடியர் அனைவருக்கு,
வந்த துன்பம் ஏன் எதற்கு?
வாய்மையில் வெல்ல, அன்பர்களே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.