எப்படி முடிக்கிறோம்?

கிறித்துவில் வாழ்வு:  


மைந்தனின் பணியை மாண்புடன் முடித்தார்.  

மறைநூல் வாக்காய் வாழ்ந்து படித்தார்.      

தந்தவர் கைகளில் தன்னுயிர் கொடுத்தார்;  

தரணியை மீட்கவே அதையும் விடுத்தார். 


நிந்தைச் சிலுவையும் மாற்றி அமைத்தார்.  


நேர்ந்தத் தீங்கிலும் வெற்றி சமைத்தார்.  


இந்த இயேசுவின் வழிவந்து நடப்பார்,  


இனியமீட்புடன் இப்புவி கடப்பார். 


ஆமென்.  


-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply