என் தந்தையார்!

என் தந்தையார்! 

குடித்து வந்த மகனைக் கண்டு, 

குடியா தந்தை என் செய்வார்? 

அடித்து வைய விருப்பம் அற்று,

 அனுப்பி விட்டார், தந்தையார்.  

பிடித்து வந்த விவிலியம் கண்டு,   

பின்னாட்களில் என் செய்தார்?  

படித்து, அப்படி வாழு என்று,

பணித்து விட்டார், தந்தையார்! 

-செல்லையா.

Leave a Reply