எது தொடர்ந்து வரும்?

எது தொடர்ந்து வரும்? 


எந்தனெண்ணம் நின்றுவிடின்,


இறப்பு என்று பொருளாகும். 

வந்தனமும், நிந்தனையும், 

வரயியலாமல் இருளாகும்.

இந்தநிலையை  எண்ணாமல், 

இங்கு நாமிருப்பின் மருளாகும். 

சொந்தமெனத் தொடர்ந்துவர, 

தேவை, இறை அருளாகும்!


-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply