ஊண் உடை நல்கும்!

ஆனவரைக்கும் ஊண் உடை நல்கும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:
10 அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
மானம் மறைக்க உடுப்பவராயினும்,
மதிப்பிற்கென்று எடுப்பவராயினும்,
ஈனப் பிறவியாய் விடுப்பவராயினும்,
ஈருடை சேர்த்து அணிவாருண்டோ?
வானம் வரைக்கும் நம் புகழ் செல்லும்;
வையகத்தாரின் வாய்களும் சொல்லும்;
ஆனவரைக்கும் ஊண் உடை நல்கும்;
அதுவே அறமெனப் பணிவாருண்டோ?
ஆமென்.

Image may contain: one or more people

Leave a Reply