உரு மாற்றம்!

உள்ளிலும், உருவிலும் மாற்றம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:28-29.
28 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.29 அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
கிறித்துவில் வாழ்வு:

உம்மை வேண்டிப் பணியும் வேளை,

உள்ளில் தூய்மை வருவதினால்,

அம்மை யப்பன் என்னும் இறையே,

அடியர் உருவில் மாறுகின்றோம்!

எம்மை ஆட்டி அலைக்கழித்த

ஈன அலகை மறைவதினால்,

செம்மை நாடிச் செல்வோருக்குச்

சிறந்த வழியும் கூறுகின்றோம்!ஆமென்.

Leave a Reply