உம்மடி தொடுவேன்!

உம்மடி தொடுவேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:45-48.
45 அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46 அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
47 அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48 அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
எந்தன் தீட்டை எண்ணுவதாலே,
எங்கும் அதனைக் கொட்டுகிறேன்.
உந்தன் மீட்பை வேண்டுவதாலே,
உம்மடி இழுக்கத் தொட்டிடுவேன்.
அந்த நாளின் பெண்மணிகொண்ட,
அரிய பற்றிலும் குறைவுற்றேன்;
மந்தமாக நான் இருந்தாலும்
மன்னிக்கிறீரே, நிறைவுற்றேன்!
ஆமென்.

Image may contain: 1 person, sitting

Leave a Reply