உண்மை ஊழியத்தின் பரிசு!

உண்மை ஊழியத்தின் பரிசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:35-37.

35உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
36தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.
37எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
இங்கே யாரோ எச்சில் இடுவார்,
என்று நினைத்து உழைக்காமல்,
அங்கேயிருந்து, அனைத்தும் காணும்,
ஆண்டவருக்கு ஊழைப்போமே.
தங்க மகனே தன்மண நாளில்,
தன் கையாலே விருந்தளிக்கும்,
எங்குமில்லா நற்பேறடைய,
எதிலும் உண்மை கொள்வோமே!
ஆமென்.

Leave a Reply