இறைவனின் கணக்கில் முதலீடு!

இறைவன் கணக்கில் முதலீடு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:5-8.
5 பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,
6 என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
7 வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவுசெய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான்.
8 பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவின் வாக்கு:
கண்முன் நிற்கும் சிறியவரை,
காண மறுப்பது பெரியகுறை. 
நண்பர்கள்கூட தவிர்ப்பதுண்டு.
நயந்திட நன்மை அவிழ்ப்பதுண்டு. 
உண்மையின் இறையோ மறுப்பதில்லை;
உதவிக்கு வராமல் இருப்பதில்லை.
எண்ணிப் பார்த்து உதவிடுவோம்;
இறைவன் கணக்கில் முதலிடுவோம்!
ஆமென்.

Leave a Reply