ஆய்வோம்!

ஆய்வோம் இறைநூல்!


நற்செய்தி: யோவான் 5:39-40.

நல்வழி:

மேயும் ஆடுகள் மேற்புல் உண்ணும்.

மேய்ந்த பின்னர் அதை அசைபோடும்.

வாயும் வயிறும் வாழ்வாய் எண்ணும்,

வழிமுறையாரே, இதை இசை பாடும்.

தேயும் நாட்கள் தெரிந்திட விழையும்.


தெரியார் நிலைதான் மேல் கீழ் ஆடும்.

ஆயும் பண்பில் இறை நூல் நுழையும்;

அது தரும் வாழ்வில் அன்பு கூடும்! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply