ஆயரில்லா ஆடுகள்!

ஆயரில்லா ஆடுகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:33-34.
“அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.”
நற்செய்தி மலர்:
தம் தம் விருப்பை நிறைவேற்றத்
தவற்றையும் செய்து சரியென்பார்.
தும் தும் என்று துள்ளித்தான்,
துன்பத் தீயில் எரிகின்றார்.
இம்மானுவலாம் இறைமகனோ
இவரையும் இரங்கிப் பார்க்கின்றார்.
அம்மாதிரியாம் ஆடுகளை
ஆயனாய்க் கூட்டிச் சேர்க்கின்றார்!.
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply