அவர்களைப் பார்த்து!

அவர்கள் அநீதர், அதனால் இறந்தார்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:4-5.

4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அவர்கள் அநீதர், அதனால் இறந்தார்;
அப்படிச் சொல்லி மழுப்பாதீர்.
எவர்கள் எப்படிப் போனாலென்ன,
என்று நினைப்பினும் அழுக்காவீர்.
தவற்றை உணரார், தம்மைத் திருத்தார்.
திருந்தாவிட்டால், இழுக்காவீர்
இவற்றினின்று யார்தான் மீள்வார்?
இயேசுவைப் பார்ப்பீர், வெளுப்பாவீர்!
ஆமென்.

Leave a Reply