அலகையும் அதன் ஆவிகளும்!

அலைக்கழிக்கும் அலகையின் ஆவிகள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:40-42.
40 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
41 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42 அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

கிறித்துவில் வாழ்வு:
அலகையும் அவன் ஆவிகளும்,
அல்லல் அடுக்கும் வேளைகளில்,
கலங்கிடும் மக்கள் துயர் நீக்க,
கடவுளின் பிள்ளையால் இயலலையே!
உலகமும், அதன் உதவிகளும்,
ஒருங்கிணைந்தும் இது இயலாது.
விலகிடா இறையின் விண்ணருள்தான்
விரட்டும் என்று முயலலையே!
ஆமென்.

Leave a Reply