அமைதி காப்போம்!

அமைதியாய் இருக்க அறிவீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:34-36.
34 இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36 அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
திருப்பணி செய்திடும் ஊழியரே,
தெய்வத்தின் திட்டம் தெரிவீரே.
ஒருசில இடங்களில் பேசாமல்,
ஊமையாய் இருப்பின் புரிவீரே.
கருப்பொருள் கற்கும் காலம்வரை,
கடவுளை மீறிச் செல்லீரே.
அருட்பெரும் ஊற்றை அவர் திறக்க,
அறிந்து பொருளைச் சொல்வீரே!
ஆமென்.

Leave a Reply