அனைவர்க்குதவுதல்!

இங்குள்ள உறவுகள் சிலநாள்தானே!கிறித்துவின் வாக்கு: லூக்கா14:25-27.

25  பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:

26  யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

27  தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

கிறித்துவில் வாழ்வு:

இங்குள்ள உறவுகள் சில நாள்தானே;

இவர்களைக் காப்பதும் இறைவன்தானே.

எங்குமெதிலும் உறவினைத்தானே,

ஏந்திப் பிடித்தல், குற்றந்தானே.

பங்கங்கலவா ஊழியமாமே;

பாரினில் கிறித்து கொடுத்தாராமே.

அங்கமென்று அவருடன் நாமே,

அனைவர்க்குதவல் ஏற்றதாமே!

ஆமென்.

Leave a Reply