அதிசயம் பார்த்த மக்கள்!

அதிசயம் பார்த்த மக்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:34-37.
34 அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35 அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36 பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37 அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப் போனார்.

கிறித்துவில் வாழ்வு:
அதிசய நிகழ்வுகள் பார்த்தும் அவர்கள்,
ஆண்டவர் இயேசுவை ஏற்கவில்லை.
சதியினை அறிவென்றழைக்கும் மக்கள்,
சரியாய் இறையைப் பார்க்கவில்லை.
விதியென்றெண்ணி வீண் போனவர்கள்,
விண்ணின் அரசில் சேர்வதில்லை.
மதியாம் இறையை மதிக்கிறவர்கள்,
மண் விண் எதிலும் தோற்பதில்லை!
ஆமென்.

No photo description available.

Leave a Reply