நற்சான்று!
நற்செய்தி : யோவான் 5:31-32.
நல்வழி:
தவற்றின் மீது தவற்றைச் செய்து,
தங்கள் திறமை எனவுரைத்தல்,
சுவற்றின் மீது வீசும் சேறாம்;
சொல்ல விரும்பா துர்ச்சான்றாம்.
எவற்றைக் கொண்டு வாழ்தல் நன்று,
என்றறிந்து வீடமைத்தல்,
கவற்றல் இல்லா அருட் பேறாம்;
கடவுள் தருகிற நற்சான்றாம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.