துணிவுடன் உரைப்போம்!

துணிவற்றவரே கேளுங்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:8-9.

8 அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.9 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.

கிறித்துவில் வாழ்வு:
தூய ஆவியர் துணையாயிருக்கத்
துணிவிற்குப் பஞ்சம் வராது.
ஆய கலைகள் அனைத்தும் கொடாத
அறிவிற்கும், குறைவு இராது.
மாயவலையில் சிக்குண்டோரே,
மறந்து இறையருள் பெறாது,
நேயனேசுவுவை மறுதலிக்கின்றார்,
நேர்மை வாழ்வும் தராது!
ஆமென்.

Leave a Reply