தற்காப்பென்று….

தற்காப்பென்று வாளெடுக்காமல்!   

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:48-51.  

48  இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.

49  அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.

50  அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.

51  அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.  

கிறித்துவில் வாழ்வு:  

தற்காப்பென்று வாள் எடுத்தவரின்,  

தவற்றைக் கண்டு தடுத்தவரே,  

நற்காப்பென்று நீர் இருக்கையிலே,   

நான் ஏன் ஆயுதம் எடுக்கின்றேன்?  

முற்காலங்கள் காட்டும் தவற்றை,

முரண்டு தொடர்ந்து பிடிக்காமல்,  

பொற்காலந்தரும் அமைதி காண,  

புரிந்து அன்பில் தடுக்கின்றேன்! 

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply