உவமைகளில் இறையரசு!

உவமைகளில் இறையரசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:9-10.
9 அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

கிறித்துவில் வாழ்வு:
மறைந்திருப்பதுதான் மறைபொருளாகும்.
மானிடருக்கு மறைவாய் இருக்கும்.
திறந்தளிப்பதுதான் இறையருளாகும்.
தெளிவும்கூட நிறைவாய் இருக்கும்.
இறந்தவர் அமைப்பது மண்ணரசாகும்.
இங்கு யாவுமே அவமாயிருக்கும்.
நிறைந்த வாழ்வோ விண்ணரசாகும்.
நீங்கள் கற்க, உவமையாயிருக்கும்!
ஆமென்.

Image may contain: text
Like

Leave a Reply