உயிராம் இறை!
நற்செய்தி: யோவான் 5:21
நல்வழி:
கடலின் அழகு கரையாகும்;
காண விரும்பின் கடப்பரே.
உடலின் அழகு உயிராகும்;
உயிர் இருப்பின் நடப்பரே.
திடமும் நீரும் காற்றாகும்,
தெளியார் இருளில் கிடப்பரே.
தடந்தராமல் உயிர் போகும்,
தட்டியெழுப்புவார் மீட்பரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.