உணவு!

வாழ்வது உணவிற்கா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:16-17.
16. அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.

17. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
கிறித்துவில் வாழ்வு:
வாயிலும் வயிற்றிலும் அடித்தவராய்,
வாழ்வது உணவிற்கேயென்று, 
நாயினைப் போன்று ஊளையிடும் 
நன்றி மறக்கும் மானிடரே, 
ஆயிரம் கோடி உயிர் எனினும்,
அன்றைய உணவை அளந்தளிக்கும்,
தாயினும் மேலாம் இறையன்பு,
தருவதை மறப்பதுதான் இடரே!
ஆமென்.

LikeShow More ReactionsComment

Leave a Reply