இறை தொழுதல்!

இறை தொழுதல்!

விதி என்றிறையை, வணங்கல் உண்டு.

வினை ஒழியென்று, இணங்கலுமுண்டு.


மதி எங்கென்று, பிணங்கல் உண்டு.

மத வெறிகொண்டு, சுணங்கலுமுண்டு.

சதி பகை விட்டு, எழுதல் உண்டோ?

சமமாய்க் கருதும், தழுவலுமுண்டோ?


கதியே இறையென விழுதல் உண்டோ?


கண்ணீரகற்றும் தொழுதலுமுண்டோ?


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply