ஆய்வோம் இறைவாக்கை!

எண்ணி ஆய்வோம் இறைவாக்கை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா:1:29
29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

கிறித்துவில் வாழ்வு:
வாக்கின் விளக்கம் புரியாமல்,
வருத்தம் கொள்வோர் நாமென்றால்,
நோக்கிப் பார்ப்போம் மரியாளை,
நொடியில் கலக்கம் நீங்கி விடும்.
ஏக்கம் எதுவும் கொள்ளாமல்,
இறையின் வாக்கை ஆய்ந்திட்டால்,
தாக்கும் வருத்தம் தவிடாகும்;
தருவார் வாழ்த்து, வாங்கி எடும்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply