அரசன் இயேசு !

இயேசு அரசன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:3.  

3   பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  
இறங்கு முன்பே இறைவனானீர். 
இரக்கத்தாலே மனிதனானீர்.  
உறங்குவோரை எழுப்பலானீர்.  
உழைப்பிலும் நீர் அடிமையானீர்.  
சிறந்து வாழ உரைக்கலானீர்;  
சொற்படியே உண்மையானீர். 
இறந்து எழுந்து மீட்பரானீர்;
இயேசரசே, நீர் எல்லாமானீர்!
ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply