இயேசு அரசன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:3.
3 பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
இறங்கு முன்பே இறைவனானீர்.
இரக்கத்தாலே மனிதனானீர்.
உறங்குவோரை எழுப்பலானீர்.
உழைப்பிலும் நீர் அடிமையானீர்.
சிறந்து வாழ உரைக்கலானீர்;
சொற்படியே உண்மையானீர்.
இறந்து எழுந்து மீட்பரானீர்;
இயேசரசே, நீர் எல்லாமானீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.