பெருங்கூட்டப் பேய்கள்!

பெருங்கூட்டப் பேய்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:29-30.
29 அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி வெகுகாலமாய் அவனைப்பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப் போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30 இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:
பெருங்கூட்டப் பேய்களின்று,
பேதையரை ஆட்டிடுதே!
பொருளாவல் தூண்டிவிட்டுப்
பொய்க்காட்சி காட்டிடுதே!
வருங்காலம் எண்ணாரோ
வலைதனிலே மாட்டினரே.
அருள்கூரும் இறையரசே,
அடியாரை மீட்டிடுமே!
ஆமென்.

Image may contain: one or more people

கல்லறையில் காணும் மனிதர்!

கல்லறையில் காணும் மனிதர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:26-28.

26 பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
27 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
28 அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:
நல்லுரை கேட்க விருப்பம் இன்றி,
நாயாய் நரியாய் அலைந்திட்டார்;
கல்லறைதனையே வீடாய்க் கருதிக்
காலிலும் கையிலும் விலங்கிட்டார்.
பொல்லான் உரைக்கும் பொய்யை நம்பி,
பூணும் உடையையும் உரிந்திட்டார்.
இல்லார் இவரும் நேர்மை அணிவார்;
இறைமகன் இவரையும் புரிந்திட்டார்!
ஆமென்.

Image may contain: people standing and outdoor

ஆழக் கடலில் அமிழும்போதும்!

ஆழக் கடலில் அமிழும்போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:22-25.

22 பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.
23 படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
24 அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்று போய், அமைதலுண்டாயிற்று.
25 அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
ஆழக் கடலில் அமிழும்போதும்,
ஆண்டவரோடுதான் அமிழ்கின்றோம்.
தாழக் குதித்துத் தப்பும்போதும்,
தந்தை அருளிலே தப்புகின்றோம்.
வாழக் கரையில் வரும்போதும் நாம்,,
வல்லவரோடுதான் வருகின்றோம்.
வீழ விடாமல் காக்கும் இறையால்,
வீணாகாது வாழ்ந்திடுவோம்!
ஆமென்.

Image may contain: ocean, sky, mountain, outdoor, water and nature

பாறையாம் கிறித்து!

பாறையாம் கிறித்து!

பாறையின்மேலே, விழுந்ததனாலே,
பாவியர் நொறுங்கி ஓய்ந்திட்டார்.
கூரையைப்போலே, பாறைகல் விழவே,
கொடியர் நசுங்கி மாய்ந்திட்டார்!
தேரையாய் அடியர் தெரியாமலேயே,
தெய்வப் பாறையுள் வாழ்ந்திட்டார்.
நீரையும் வழங்கி, நிலைவாழ்வளித்தார்;
நினையாரேதான் தாழ்ந்திட்டார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text

யார் நம் உறவு?

யார் நம் உறவு?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:19-21.
19 அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
20 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21 அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
யார் நம்மோடு இருப்பார் என்றால்,
அண்ணன் தம்பியர் வருவதில்லை.
ஊர் பண்பாடும் உறவின் உயர்வாம்
அன்னையும் உதவி தருவதில்லை.
பார் படைத்தவரின் பணியினில் சேர,
பலருக்கு இன்று எண்ணமில்லை.
சீர் மிகு செய்தியாய் வாழ்வார் உறவே
சிறந்தது, வேறு மண்ணிலில்லை!
ஆமென்.

No photo description available.

பெருகட்டும், பெருகட்டும்!

பெருகட்டும், பெருகட்டும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:17-18.
17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
18

ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
ஆண்டவர் அளிக்கும் அருளும் பெருகும்;
அதனை அறிபவர் பற்றும் பெருகும்.
மீண்டவர் வாழ்வில் நன்மை பெருகும்.
மேன்மை வழியாம் அன்பும் பெருகும்.
வேண்டுதல் செய்ய வலுவும் பெருகும்;
விடுதலை ஆவியர் வரமும் பெருகும்.
கூண்டிலிருப்பின் எப்படிப் பெருகும்?
கிறித்துவாலே எல்லாம் பெருகும்!
ஆமென்.

No photo description available.

எப்படி வெளிச்சம் வீசுகிறோம்?

எப்படி வெளிச்சம் வீசுகிறோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:16.
16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

கிறித்துவில் வாழ்வு:
கொளுத்திய விளக்கைக் குடத்தினுள் மறைத்தால்
கொடுக்குமோ நமக்குப் பெருவெளிச்சம்?
எழுத்தினில் சொல்வதை இயல்பினில் திரித்தால்,
ஏற்படுமோ இனி இறைவிருப்பம்?
அழுத்திடும் பேரவா இழுத்துப் பிடித்தால்,
அந்நலம் தன்னலம், அழித்துவிடு.
மழுப்பிடும் பதிலால் பயனெதுமில்லை.
மறைபொருள் தெரிய மனது கொடு!
ஆமென்.

Image may contain: text

அன்னை கிளாறி பெல் செல்லையா

அன்னை கிளாறி பெல் செல்லையாவின்
நினைவு நாள் – 14-02-1990.

ஒருமுறைப் பெற்றிடும் அன்னையர் நடுவில்,
இருமுறை எம்மைப் பெற்றவரே,
திருமறை ஊட்டித் தெய்வம் அறியத்
திருப்பும் வலியும் உற்றவரே,
அருமையாய் ஈந்த அறுவரும் இன்று,
அமைதியில் உம்மை நினைந்தோமே.
மறுமுறை இறைமுன் காணும் வரையில்,
மாபெரும் அன்பில் நனைந்தோமே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person
Like

நல்ல நிலமாவோம்!

நல்ல நிலமாவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:15.
15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பாதை, பாறை, முள்ளாயிருந்தேன்;
பயனற்றவனாய்ப் பாழாய்த் திரிந்தேன்.
தீதை நம்பித் தீமைச் செய்தேன்;
தீங்கைத்தானே திரும்பக் கொய்தேன்.
பேதை நானும் இறைமுன் வந்தேன்;
பிழைகள் திருத்தப் பயனும் தந்தேன்.
தூதை ஏற்றுத் துயரும் பொறுத்தேன்;
தூயோன் அருளால் விளைச்சல் அறுத்தேன்.
ஆமென்.

Image may contain: sky, grass, outdoor and nature

இரக்கம்!

இரக்கம் என்னும் இறையின் பண்பு!

இரக்கம் என்பது இறையின் பண்பு.
இதனால்தானே இருக்கிறோம் இன்று.
உருக்கம் கொண்ட இயேசு போன்று,
உதவி செய்வதே எவர்க்கும் நன்று.
மறுக்கும் நண்பர் பலபேர் உண்டு;
மாறுவர் ஒருநாள் உண்மை கண்டு.
பெருக்கும் செல்வம் அன்புகொண்டு,
பேருலகிற்குச் செய்வோம் தொண்டு!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people, people sitting, table and indoor