முதற்கண் வணங்கிடுவோம்!கிறித்துவின் வாக்கு: 10:5-6.

5ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
6சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.

கிறித்துவில்  வாழ்வு:

மாற்றார் நம்முன் மமதையில் இருந்தும்,
மதித்து முதற்கண் வணங்கிடுவோம்.
தோற்றார் என்றே நமை நினைத்தாலும்,
தூய அமைதிக்கு இணங்கிடுவோம்.
வேற்றாராக வெறுக்கு மிந்நாட்டில்,
விண் வாக்கின்படி தாழ்ந்திடுவோம்.
போற்றல் புகழ்ச்சி இறையால் கிடைக்கும்;
புனிதர் வழியில் வாழ்ந்திடுவோம்!
ஆமென்.

விண்ணூழியரே அள்ளாதீர்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:4.

4பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.
கிறித்துவின் வாழ்வு:
காசுக்கென்றும் பொருளுக்கென்றும் 
கடவுள் நாடி வருவோர்கள்,
பேசும் தெய்வ வாக்கு கேளார்;
பையை நிரப்பிக் கொள்ளாதீர்.
மாசுக்குற்றம் மலிந்த நெஞ்சம்
மாற வேண்டிக் கேட்போர்கள்,
வீசுவார்கள் காசைத் தூசாய்;
விண்ணூழியரே, அள்ளாதீர்!
ஆமென்.

ஓநாய்களுக்குள்ளே ஓர் ஆடு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:3.

3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
பேநாய்க் கடித்தவர் முன்சென்று,
பேரிடர் வராது வந்திடலாம்.
ஒநாய்க் கூட்டம் உள்நுழைந்து,
ஓராடுயிருடன் வந்திடுமோ?
ஆனாலும் உம் சொல் கேட்டு,
அடியர் நாங்கள் செல்கின்றோம்.
நானாவிதத்தின் தீங்குகளும்,
நன்மை தராமல் முந்திடுமோ?
ஆமென்.

அறுப்போ மிகுதி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:1-2.

1இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
அறுப்போ மிகுதி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:1-2.
1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அறுக்கும் நிலத்தின் அளவோ பெரிது;
அறுவடையாளரின் தொகையோ சிறிது.
பொறுக்கும் இறையின் அருளோ பெரிது;
புனிதர் செய்யும் தொண்டோ சிறிது, 
வெறுக்கும் மனிதரின் கூட்டமோ பெரிது.
வேண்டுதலாலே மாறுது சிறிது.
நொறுக்கும் ஐயா, எம்மைச் சிறிது;
நிகழும் நன்மை நாட்டில் பெரிது!
ஆமென்.

கலப்பையைப் பிடிப்போரே!

கலப்பைப் பிடித்து உழுவோரே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:61-62.61

பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.


கிறித்துவில் வாழ்வு:

வீட்டார் அனுமதி கிடைத்த பின்னர்,

விரும்பும் ஊழியம் செய் என்பார்.

நாட்டார் எதிர்க்கிறார் என்றறிந்தால்,

நம்மவர் எப்படி அனுப்பிடுவார்?

போட்டார் இறைமகன் ஓராணை;

போக்குச் சொன்னவர் திணறுகிறார்.

காட்டாதே முகம் பின்பக்கம்;

கலப்பையைப் பிடித்து உழு என்றார்!

ஆமென்.

மறுமுறையா?

காலந்தராது மறுமுறையாம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:59-60.
59வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
6
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அழைக்கும்போது அடிபணிவதுதான், 
ஆண்டவர் காட்டும் இறைப்பணியாம்.
உழைக்கும் வலுவும் உதவும் பொருளும்,
உவந்து அருளக் குறைவிலையாம்.
பிழைப்பிற்கென்று போக்குச் சொல்லி,
போகாதிருத்தல் பொறுப்பிலையாம்.
கழைக்கூத்தாடி கடவுளை மறப்பின்,
காலந்தராது மறுமுறையாம்!
ஆமென்.

ஆடுகளைப் பாருங்கள்!

ஆடுகளைப் பாருங்கள்!


அறுப்பவரைத்தான் ஆடும் நம்பும்;

அதனைத் தடுப்பின், நம்மேல் எம்பும்.

வெறுப்பரசியல்தான் இன்று வெல்லும்;

வீணர் என்று நமையும் சொல்லும்.

பொறுக்கும் பண்பை இறையில் பாரும்;

பொங்கி எழுந்தால் துயரே சேரும்.

கறுப்பு ஆடுகள் நல்விலை போகும்;

கண்ணைத் திறவும், அவை கறியாகும்!


-கெர்சோம் செல்லையா.

எதுவரைக்கும் இறைவா?

எதுவரைக்கும் இறைவா?


தேன் போன்ற நற்செய்தி,

தென்னாடு தந்திடினும்,

நான் கேட்கும் நல்லாட்சி,

நமக்கில்லாக் குறையென்பேன்.

வான் வென்ற வலிமையென,

வாழ்த்து அவர் பாடிடினும்,

ஏன் என்று நான் கேளேன்;

எதுவரைக்கும் இறையென்பேன்?


-கெர்சோம் செல்லையா.

வீடு!

கிறித்துவின் வீடு!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:57-58.

57அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
58அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கூடில்லாத குருவியும் இல்லை;
குழியில்லாத நரியும் இல்லை.
பாடில்லாத மனிதரும் இல்லை.
படைத்தவர்க்கிங்கு வீடும் இல்லை.
கோடிகள் கூட்டி ஆளவும் இல்லை.
கோபுரம் கட்டி வாழவும் இல்லை.
கேடில்லாது திருப்பணி செய்வேன்;
கிறித்துவின் வீடே எனது எல்லை!
ஆமென்.

வேண்டாம் கொலைவெறி!

அழித்தல் பழித்தல் வேண்டாமே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:54-56.

54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பழித்திடும் மாந்தர் செயல் கண்டு,
பகைத்திடும் பண்பு எனில் வந்தால், 
அழித்திடும் அவ்வகைப் பண்புகளை;
அன்பில் வளர எனக்கிரங்கும்.
கொழித்திடும் தீயோர் நிலைகண்டு,
கொடுமை செய்ய நானினைந்தால்,
மழித்திடும் பேயின் இருப்பிடத்தை;
மன்னிப்பருளி எனிலிறங்கும்!
ஆமென்.