திருந்திய கள்வன்!

கிறித்துவில் வாழ்வு:  
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  
என்று நழுவும் நண்பர்களே,  
உறுதியாக உம்மில் வருமோ,  
உணர்ந்த கள்வன் பண்புகளே?  
அறுதி நேரம் அறியா வாழ்வில்,  
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   
கருதி இன்றே திருந்தினால்தான்,     
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

கிறித்துவில் வாழ்வு:  
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  
என்று நழுவும் நண்பர்களே,  
உறுதியாக உம்மில் வருமோ,  
உணர்ந்த கள்வன் பண்புகளே?  
அறுதி நேரம் அறியா வாழ்வில்,  
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   
கருதி இன்றே திருந்தினால்தான்,     
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

கிறித்துவில் வாழ்வு:  
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  
என்று நழுவும் நண்பர்களே,  
உறுதியாக உம்மில் வருமோ,  
உணர்ந்த கள்வன் பண்புகளே?  
அறுதி நேரம் அறியா வாழ்வில்,  
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   
கருதி இன்றே திருந்தினால்தான்,     
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

இகழும் கள்வன்!

இகழும் கள்வன்!  
கிறித்துவின்வாக்கு:  லூக்கா 23: 39.  

39
  அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  
என்ன  எதுவெனத் தெரியாமல்,  
இகழ்வோர் நம்மில் பலருண்டு.  

சொன்ன கள்வனும் இவரைப்போல், 
சொல்வதில் என்ன வியப்புண்டு?  
முன்னும் பின்னும் அறியாமல்,  
மொழிந்தால் என்ன பயனுண்டு? 
இன்னாள் இதனை நாமுணர்ந்து,  
ஏசுவை அறிந்தால் மீட்புண்டு!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.    

மும்மொழிகள்!

மூன்று மொழிகள்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23: 38.  
38  இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.  

கிறித்துவில் வாழ்வு:  
மூன்று மொழிகளில் எழுதி வைத்தார்,  
முள்முடி வேந்தனின் வெளிப்பாட்டை.  
தோன்று மொழிகளை நாம் மதித்தால்,  

துயருந் துவட்டுமோ இந்நாட்டை?  
சான்று இதுவென நான் உரைத்தால்,  

சண்டைக்கெடாதீர் இப்பாட்டை.  
ஈன்று எடுக்கிற இறையறிவால், 
எங்கும் ஒழியும் மொழிவேட்டை!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

ஏளனம்!

ஏளனம் செய்கிறார்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23: 35-37.  

35  ஜனங்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும் என்றார்கள்.

36  போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

37  நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

யாரிவர் இயேசு, என்றென அறியார், 

ஏளனம் செய்து இகழ்கின்றார்.   

வேரினை முறித்து விளைச்சல் கேட்பார்;

வீணாய் மண்ணை அகழ்கின்றார்.

ஊரினில் இவர்போல் பலபேர் உள்ளார்;  

உண்மை இழந்துத் திகழ்கின்றார்.  

பாரினை மீட்கும் பணியென அறிவார்,  

பணிந்து இறையைப் புகழ்கின்றார்.  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

பொங்கல்!

பொங்கல் வாழ்த்துகள்!  

ஒருவரை ஒருவர் மதித்து,  

ஒவ்வொருவரையும் பொறுத்து,  
பெருமை, பிளவும்  வெறுத்து, 
பெரியோர் உண்பார் பொங்கல்.  
தெருவினில் குப்பை தவிர்த்து,  
தெரியாத் தொற்றும் தடுத்து,  
அருவருப்பனைத்தும் விடுத்து,  

அன்பாய் உண்போம் பொங்கல்!  
வாழ்த்துகள்!    
-கெர்சோம் செல்லையா,
இறையன்பு இல்லம்,
24, செக்ரெட்டேரியட் காலனி,  
இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி, 
குளத்தூர், சென்னை-600099.  

பொங்கல் வாழ்த்துகள்!

பொங்கல் வாழ்த்துகள்!  

ஒருவரை ஒருவர் மதித்து,  

ஒவ்வொருவரையும் பொறுத்து,  
பெருமை, பிளவும்  வெறுத்து, 
பெரியோர் உண்பார் பொங்கல்.  
தெருவினில் குப்பை தவிர்த்து,  
தெரியாத் தொற்றும் தடுத்து,  
அருவருப்பனைத்தும் விடுத்து,  

அன்பாய் உண்போம் பொங்கல்!  
வாழ்த்துகள்!    
-கெர்சோம் செல்லையா,
இறையன்பு இல்லம்,
24, செக்ரெட்டேரியட் காலனி,  
இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி, 
குளத்தூர், சென்னை-600099.  

பொங்கல் வாழ்த்து!

பொங்கல் வாழ்த்துகள்!  

ஒருவரை ஒருவர் மதித்து,  

ஒவ்வொருவரையும் பொறுத்து,  
பெருமை, பிளவும்  வெறுத்து, 
பெரியோர் உண்பார் பொங்கல்.  
தெருவினில் குப்பை தவிர்த்து,  
தெரியாத் தொற்றும் தடுத்து,  
அருவருப்பனைத்தும் விடுத்து,  

அன்பாய் உண்போம் பொங்கல்!  
வாழ்த்துகள்!    
-கெர்சோம் செல்லையா,
இறையன்பு இல்லம்,
24, செக்ரெட்டேரியட் காலனி,  
இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி, 
குளத்தூர், சென்னை-600099.  

நம் வேண்டல் என்ன?

நம் வேண்டல் என்ன?  


கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:34.  

34  அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  


நிந்தை சுமக்கும் நேரங்களில், 

இந்த மாந்தர் என் செய்வார்?  

சொந்த விடுதலை கேட்பவராய்,  


நொந்து அழுது வேண்டிடுவார். 


அந்த சிலுவையில் ஆண்டவரோ,  


விந்தை வாக்கால் பேசுகிறார்.  


தந்தை இறையின் மன்னிப்பை,  


மந்த கயவர்க்கு வேண்டுகிறார்.  


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.  

கொடுமை!

கொடுமை!  


கிறித்துவின் வாக்கு: லூக்கா 23: 32-33.  

குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்கள்.

33  கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

குற்ற மற்ற ஒருவரைக் கொல்லல்,

குறையுள்ள அமைப்பின் கொடுமை.  

மற்ற குற்றவாளியோடறைதல்,  

மனிதர் நிகழ்த்தும் கொடுமை.  

பெற்ற தீங்கை நமக்கென ஏற்றும்,  

பேரருள் மறுத்தல் கொடுமை.  

நற்றமிழ் வாக்கில் நாமின்று கேட்டும்,    

நன்றி மறப்பின் கொடுங்கொடுமை!  

ஆமென்.