
மூடுவோம் நாம்!

The Truth Will Make You Free
நல்வாழ்வு:
சுவர்களின் நடுவில் முழங்கும் வாக்கு,
செயல்பட அவரும் செல்வாரா?
தவறுகள் உணர்ந்து, தம் நிலை அறிந்து,
தாழ்ந்தோர் எழும்பக் கொடுப்பாரா?
எவர் எவருக்கோ எடுத்துக் கொடுத்து,
ஏமாறுவதை விடுப்பாரா?
-கெர்சோம் செல்லையா.
நல்வாழ்த்து:
தூசைத் தட்டி எழும்பி விடு;
துயர் தருவாரை மறந்துவிடு.
ஏசையாமேல் பற்று வைத்து
ஏழையருக்கு இரங்கிவிடு!
-கெர்சோம் செல்லையா.
எவர்கள் உதவிட வருவாரோ,
அவர்கள் இறையின் ஊழியராம்;
சுவர்கள் எழுப்பிப் பிரிக்காமல்,
சேர்க்கும் பணியைச் செய்வாராம்!
-கெர்சோம் செல்லையா.
கேட்டு மகிழ்வீர் நற்செய்தி;
கிறித்து வழங்கும் அருட் செய்தி!
நல்வாழ்த்து:
காது உள்ளவர் கேட்பார் என்றீர்;
காதைப் பெற்றுக் கேட்கின்றோம்.
வாது எல்லாம் நீங்கச் செய்வீர்;
வாழ்த்தி உம்மைத் தொழுகின்றோம்.
தீது நாளில் உந்தன் வீட்டில்
பாதுகாப்பீர், புகழ்கின்றோம்.
ஏது மில்லா இந்த வாழ்வை
இனிமையாக்கும், வாழ்கின்றோம்!
நல்வாக்கு:மத்தேயு 26:14-16.
காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்:
“பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘ இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ‘ என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.”
நல்வாழ்வு:
முப்பது வெள்ளிக் காசிற்காகக்
முடிச்சில் விழுந்தான் யூதாசு.
அப்போதிருந்தது போன்று இன்றும்
அழிக்கப் பார்க்கிறான் பிசாசு.
தப்பாய்ச் செல்வம் சேர்க்க விரும்பின்
தாவி ஓடுமே நம் காசு.
எப்போதும் நாம் மறக்க வேண்டாம்;
இயேசு போதுமே, இவை தூசு!
ஆமென்.
அறிவைத் தருவது நற்செய்தி;
அதன்படி நடப்பின் உயிர்மீட்சி!
“இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார். இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, ‘ இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே ‘ என்றார்கள்.