பாலை நிலத்தில் இறைவாக்கு!

பாலை நிலத்தில் இறைவாக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:1-2.
1 திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
பாலை நிலத்தில் ஒலிக்குதய்யா;
படைத்தோன் வாக்கு பலிக்குதய்யா.
மாலைப் பொழுது நெருங்குதய்யா;
மகிழ்வும் மறைய விரும்புதய்யா.
நூலைப் போன்று உடையிருக்கும்;
நுண்மதி கொண்டு எண்ணுமய்யா;
வேலைக் கேற்ப விளைவிருக்கும்;
விண்ணின் விருப்பைப் பண்ணுமய்யா!
ஆமென்.

பேறாகும்!

பேறாகும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2:51-52.
51 பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள்.
52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்றோருக்குப் பணிந்து நடத்தல்,
பிள்ளையின் வாழ்வில் பேறாகும்.
கற்றோர் உணர்ந்து கடைபிடிப்பின்,
காணும் இன்பம் நூறாகும்.
சுற்றும் உலகில் சேர்ந்து வாழ்தல்,
சுமையை இறக்கும் அருளாகும்.
மற்றோர் மகிழ நன்மை செய்வின்
மனித வாழ்க்கை பொருளாகும்!
ஆமென்.

Image may contain: text

History

History of the common man!

History is always the story of the victors. The victims and the vanquished play either no role or negative role. This is true everywhere and everytime. But the history of the Church flows down from a Victim who was supposed to be vanquished by those who were in power then. Other active players of the Church history were also ordinary men and women, who were treated like scum, if I can use the word of St.Paul. History, that is centred around kings and kingdoms leads to subjugation, subordination and suppression. On the other hand, if historians focus on the common man it can uproot all despotic evils that we see in India. Wake up historians, wake up!

Image may contain: 1 person, text and close-up

அறிவைத் தாரும் ஆண்டவரே!

அறிவைத் தாரும் ஆண்டவரே!
இறைவாக்கு: லூக்கா 2:48-50.
48 தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.
50 தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

இறைவாழ்வு:
காணும் கண்கள் இரண்டிருந்தும்,
காட்சியின் பொருளோ தெரியவில்லை.
பேணும் காதுகள் இரண்டிருந்தும்,
பேச்சின் ஆழமும் புரியவில்லை.
நாணும் என்னை உதறாமல்,
நல்லறிவாலே திருத்திடுமே.
வேணும் எனக்கு உம் கண்ணும்,
விண்ணின் காதும், பொருத்திடுமே!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

துணிவு பிறக்கும்!

துணிவு பிறக்கும்!

நேர்மை கொள்வீர்,
துணிவு பிறக்கும்.
நிம்மதி வேண்டின்,
பணிவு திறக்கும்.
யாரிதை ஏற்பார்?
எண்ணம் கெடுக்கும்.
இறைவன் அருளே,
இவற்றைக் கொடுக்கும்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 3 people, people smiling, people standing and text
LikeShow More Reactions

Comment

இளமையில் கல்!

இளமையில் கல்!
இறைவாக்கு: லூக்கா 2:46-47.
46 மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
47 அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.

இறைவாழ்வு:
சிற்றிளம் வயதில் சேர்ப்பது என்ன?
சிறகுகள் விரித்துப் பார்ப்பது என்ன?
பெற்றிட வேண்டிய செல்வம் என்ன?
பிள்ளைகளே உம் விருப்பம் என்ன?
கற்றிடும் பருவம் இளவயதாகும்.
கரையாச் செல்வம் கல்வியேயாகும்.
முற்றின அறிவு கிறித்துவேயாகும்;
முயலும் அவர்போல், வெற்றியேயாகும்!
ஆமென்.

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Comment

Comments

ஈராறு அகவை முடித்த இயேசு

ஈராறு அகவை முடித்த இயேசு

இறைவாக்கு: லூக்கா 2:41-45.
41 அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
42 அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்,
43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44 அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45 காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.

இறைவாழ்வு:
ஈராறு அகவை முடித்துவிட்டால்,
யூதர் இளைஞர் ஆகிடுவார்.
சீராக வாழத் தமை ஈய,
செருசலேம் கோயில் ஏகிடுவார்.
வாராது வந்த இறைமகனும்,
வாழ்வைப் படைக்கச் செல்கின்றார்.
பாராது போகும் இளைஞர்களே,
பணிவோர் வாழ்வில் வெல்கின்றார்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

இறையருள்-அறிவு பெருகுக!

Image may contain: text
LikeShow More Reactions

Comment

இறையருள்-அறிவு பெருகுக!
இறைவாக்கு: லூக்கா 2:39-40.
39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
 
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
 
இறைவாழ்வு:
என்னாவி என்பொருள் என்னுடலை
எனது விருப்பில் இயக்கிவிடின்,
பொன்னாலும் வாங்க இயலாத,
புதையல் அறிவருள் கிடைக்காதே.
தன்னாவி தன்பொருள் தன்னுடலை,
தந்தையாவியுள் கொண்டு வரின்,
பின்னாளில் இன்பம் பெரிதுறுவாய்.
பெருமையில் அதனை உடைக்காதே!
ஆமென்.

அன்னாளைப் போல்….

அன்னாளைப் போல்….
இறைவாக்கு: லூக்கா2:36-38.
36 ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37 ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.
38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.

இறைவாழ்வு:
எண்பத்து நான்கு வயதானாலும்,
இறைப்பணி செய்தார் அன்னா.
கண் செத்து முடும் காலமளவும்,
கருத்தாய் உழைப்பேன் மன்னா.
பெண்ணை மதியா மக்கள் நடுவே,
பெரும்பணி செய்தவர் அன்னா.
உண்மை மட்டும் உரக்கக்கூறி,
உம் பணி செய்வேன் மன்னா!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

மதிக்க மறந்த மனிதருக்கு!

மதிக்க மறந்த மனிதருக்கு!

துறவியாய் வாழ்ந்த துயரைப் போற்றி,
தொண்டு செய்தார் அன்று.
மறதியாய்க்கூட மதிக்கவிலையே,
மன நலமற்றோர் இன்று.
இறைவனாவி இல்லாரிடமே
இப்படி நிகழும் என்று,
பிறவி எடுத்த எவர்க்கும் சொல்வேன்,
பெரும் பணிவோடு நின்று!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 15 people, including Isaac Jebastin Asfcyf, child
LikeShow More Reactions

Comment

Comments