நன்கு கேட்பாய் இறைச்செய்தி!
நன்கு கேட்பாய் இறைச்செய்தி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:16-20.
16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
கிறித்துவில் வாழ்வு:
இன்று வராதா நற்செய்தி?
என்று எங்கும் ஏழையரும்,
கன்று போன்று துள்ளுகிறார்;
கடவுளின் அருளை அள்ளுகிறார்.
நின்று கேட்கும் என் நண்பா,
நீயும் ஆவியில் நிறைவதற்கு,
நன்கு கேட்பாய் இறைச்செய்தி;
நமக்கு அதுதான் நற்செய்தி!
ஆமென்.
முழங்கால் முடக்கி வாழ்த்துகிறார்!
தலைவர்களே கேளுங்கள்!
தலைவர்களே கேளுங்கள்!
இந்தியர் வாழவே வாழ்வோம்;
ஏழையர் விழுவின் விழுவோம்.
முந்தைய நாள்போல் பிரியோம்;
முரடராய், வெறியராய்த் திரியோம்.
தந்தையாய்ப் பிறரை மதிப்போம்;
தவற்றினை மட்டுமே மிதிப்போம்.
விந்தையாய் உயர உழைப்போம்.
விண்ணின் அருளால் தழைப்போம்!
-கெர்சோம் செல்லையா.
அதிசயமானவர்!
அதிசயமானவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா4:9-13.
9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10 ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11 உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
கிறித்துவில் வாழ்வு:
அதிசயம் என்ற சொல்லிற்கு,
ஆட்சியாளர் இறைமகனார்.
பதிலைக் கேட்கும் வேண்டலுக்குப்
பரிசாய்த் தருகிறார் நிறைமகனார்.
சோதனை ஐயம் கொள்ளாது,
சொந்தம் என்றே நம்பிடுவீர்.
மேதினி அறியா அதிசயத்தை,
மேலும் செய்வார், கும்பிடுவீர்.
ஆமென்.
விரிப்பவர் விழுமிடம் வலையே!
விரிப்பவர் விழுமிடம் வலையே!
சத்ரியர் செய்வதும் கொலையே;
சூத்திரர் ஆயினும் கொலையே.
பத்திரமாகத் தம்மைக் காக்கும்,
பார்ப்பனர் செய்யினும் கொலையே.
இத்தரைப் புவியின் கொலையே,
ஏழைக்கு மாற்றினாய் நிலையே.
வித்தகராகத் தம்மை எண்ணி,
விரிப்பவர் விழுமிடம் வலையே!
-கெர்சோம் செல்லையா.
பித்தர் என்று மனிதர் நினைப்பார்!
பித்தர் என்று மனிதர் நினைப்பார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:5-8.
5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7 நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
பத்து கொடுத்தால் முடியாதென்பார்;
பதினாயிரமெனில் அடிமையாவார்.
சித்துவிளையாடும் அரசியல் அறிஞர்,
சிறுமையிலேதான் கிடக்கின்றாரே!
மொத்தமாகவே அலகை கொடுத்தும்,
முடியாதென்றார் இறையின் மைந்தர்.
பித்தர் என்று மனிதர் நினைப்பார்.
புனிதரோ, நேர்வழி நடக்கின்றாரே!
ஆமென்.
கல்லை உணவாய் மாற்றும் வலிமை!
கல்லை உணவாய் மாற்றும் வலிமை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:3-4.
3 அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
கல்லை உணவாய் மாற்றும் வலிமை,
கடவுளின் மகனில் உண்டெனினும்,
வல்லமை காட்டி, வாழ்த்துகள் வாங்க,
வல்லோன் இயேசு விரும்பவில்லை.
இல்லா வரங்கள் இருப்பதாய்க் கூறும்,
இன்றைய ஊழியர் இதை அறியின்,
பொல்லா அலகை போகவே போவான்.
புரியார் சரியாய்த் திரும்பவில்லை!
ஆமென்.
பசியாற்றுபவர் எங்குள்ளார்?
பசியாற்றுபவர் எங்குள்ளார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 4:1-2
1 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
2 நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
கிறித்துவில் வாழ்வு:
பசியில் வதங்கும் ஏழைக்கு,
பார்க்கும் ஆட்சியர் என்செய்தார்?
கசியும் நீரைப் பெறுவதற்குக்
கால் கடுக்க வைத்துள்ளார்.
ருசியாய் உணவு உண்பவர்க்கு,
பசியின் கொடுமை உரைப்பவர் யார்?
புசியும் நண்பா, என்றழைத்துப்
பசியாற்றுபவர் எங்குள்ளார்?
ஆமென்.
ஆண்டு முடித்த அரசரா? அவதிப்படும் மனிதரா?
ஆண்டு முடித்த அரசரா? அவதிப்படும் மனிதரா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:32-38.
32 தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
33 நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
34 யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
35 நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
36 சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
37 லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.
38 ஏனோஸ் சேத்தின குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
கிறித்துவில் வாழ்வு:
ஆண்டு முடித்த அரசரைப் பாடி,
அறிக்கையாக்கினால், வரலாறு.
மாண்டு போகும் மக்களை நாடி,
மதிப்புரை எழுதுவார் நமில் யாரு?
வேண்டுகின்றோர் விடுதலையாக,
விண்வழி காட்டும் ஏடேது?
தோண்டுகின்றோர் தூய்மையாவார்;
தோல்வி என்பது கிடையாது!
ஆமென்.