விருந்து கொடுப்பார் உள்ளம்!

விருந்து கொடுப்பார் உள்ளம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:43-46.

43 சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,
44 ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என்கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45 நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.

கிறித்துவில் வாழ்வு:
விருந்து கொடுப்பார் நெஞ்சத்தை,
விண்ணின் அரசர் புரிந்துள்ளார்.
இருந்து போங்கள் என்பாருள்,
இருக்கும் நஞ்சும் அறிந்துள்ளார்.
திருந்துவாரின் செயல்பாட்டைத்
தெரிந்து தெய்வம் அழைத்துள்ளார்.
அருந்துவோம் நாம் அவரன்பை;
அழைப்பை ஏற்றார் தழைத்துள்ளார்!
ஆமென்.

Image may contain: people sitting, table and indoor

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

மின்னலைப் போன்று மிளிர்ந்து மறையும்,
மேதினி வாழ்வை ருசிக்கும் நாம்,
இன்னொரு ஆண்டை இனிதாய்ப் பெறுதல்,
இறைவன் கொண்ட இரக்கமாம்.
நன்மையை விதைத்து நன்மையை அறுக்கும்,
நல்லோர் உலகை விரும்பும் நாம்,
என் செய்தோமென எண்ணி உழைப்பின்,
இனியும் வாழ்வைப் பெருக்குமாம்!

-கெர்சோம் செல்லையா.

எண்ணிலடங்கா என் பாவம்!

எண்ணிலடங்கா என் பாவம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:40-42.
40 இயேசு அவளை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
41 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
42 கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பண்ணும்போது தீமையென்று,
பாவி எனக்குப் புரியவில்லை.
எண்ணும்போது எண்ணிக்கையும்
எத்தனையென்று தெரியவில்லை.
மண்ணாய் நானும் அழியாதிருக்க,
மாபெரும் அன்பைப் பொழிபவரே,
விண்ணை எட்டும் மன்னிப்பருளை,
விழுந்து பணிந்து மொழிவேனே!
ஆமென்.

Image may contain: sky, outdoor and text

பரிவின் பார்வை!

பரிவின் பார்வை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:36-39.
36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து,
38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

கிறித்துவில் வாழ்வு:
கண்ணில் காணும் இழிவு நீங்க,
கடிந்து கொண்டால் சென்றிடுமோ?.
புண்ணைப் பார்த்து, முகம் சுளித்தால்,
புரையோடிடுதல் குன்றிடுமோ?
பண்ணும் பாவம் விட்டு ஒழிக்க,
பரிந்து அணைத்தால் நின்றிடுமே.
எண்ணை மருந்தாய் நாமிருப்போம்;
இயேசு வழியில் வென்றிடுமே!
ஆமென்.

Image may contain: text

பரிவின் பார்வை!

பரிவின் பார்வை! கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:36-39. 36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். 37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து, 38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். 39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். கிறித்துவில் வாழ்வு: கண்ணில் காணும் இழிவு நீங்க, கடிந்து கொண்டால் சென்றிடுமோ?. பண்ணும் பாவம் விட்டு ஒழிக்க, பரிந்து அணைத்தால் நின்றிடுமே. புண்ணைப் பார்த்து, முகம் சுளித்தால், புரையோடிடுதல் குன்றிடுமோ? எண்ணை மருந்தாய் நாமிருப்போம்; இயேசு வழியில் வென்றிடுமே! ஆமென். Image may contain: text Like Comment Share Comments

ஊண் உடை அன்று!

ஊண் உடை அன்று!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:33-35.
33 எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34 மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்என்கிறீர்கள்.
35 ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உண்டு மகிழ்ந்து  உரைப்பாருண்டு;
உண்ணா நிலையில் உரைப்பதுமுண்டு.
முண்டுமின்றி உழைப்பாருண்டு;
முதற்தர உடைகள் உடுப்பதுமுண்டு.
கொண்டுவருவார் ஊண் உடையன்று;
கொடுமை வெறுக்கும் அறிவே நன்று.
கண்டுகொண்ட பிள்ளைகள் இன்று,
கடவுளரசில் வாழ்வார் நன்று!
ஆமென்.

குறைகூறும் கூட்டம்!

குறைகூறும் கூட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 7:31-32.
31 பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?
32 சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
குனிவது குற்றம், நிமிர்வது குற்றம்,
குறைதான் கூறும் நம் சுற்றம்.
இனிமை பெற்றும், ஏற்றம் உற்றும்,
எண்ணம் கெட்டால் பிதற்றும்.
தனியாய் அமர்ந்து, தம்குறை உணர்ந்து,
தம்மைத் திருத்துவதே மாற்றம்.
பணிவாய் நடந்து, பண்புகள் புகழ்ந்து,
பாராட்டார்க்கு ஏமாற்றம்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

யார் பெரியவர்?

யார் பெரியவர்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:27-28.
27 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்.
28 ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
தன்னைத்தானே உயர்த்தும் உலகில்,
தாழ்மை அணிந்து மொழிபவர் யார்?
முன்னே பின்னே அறியாதவர்க்கும்,
முக அக அன்பைப் பொழிபவர் யார்?
இன்னாள் ஊழியர் யோவான்போன்று
எளிமை கொண்டால் உயர்ந்திடுவார்.
சொன்னால் கேட்க மறுத்து முரண்டால்,
சோதனை நாளில் அயர்ந்திடுவார்!
ஆமென்.

Image may contain: 1 person, hat and text
LikeShow More Reactions

காற்றில் அசையும் நாணலல்ல!

காற்றில் அசையும் நாணலல்ல!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:24-26.
24 யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
25 அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.

அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
காற்றில் அசையும் நாணலல்ல,
கடவுளின் ஈவாம் பற்றுறுதி.
தோற்று மறையும் தூளுமல்ல,
தூய்மை நாடும் நம்முறுதி.
ஏற்று வாழும் கிறித்தவரே,
இயேசு யாரெனச் சொல்வோமே.
மாற்றுவோம் பலர் ஐயங்களை;
மாறாப் பற்றால் வெல்வோமே!
ஆமென்.

Image may contain: tree, plant, outdoor and nature
LikeShow More Reactions

Commen

நாட்டை வளைத்தது போதாதென்று,

நாட்டை வளைத்தது போதாதென்று,
நாம் நுழைந்தோம் அவர் காட்டில்.
வீட்டை இழந்த விலங்குகள் இன்று,
விருந்திற்கு வந்தார் நம் வீட்டில்.
மாட்டை அடித்து, மானையும் பிடித்து
மழைதரும் மரத்தையும் அழிக்கின்றோம்.
காட்டில் வாழும் விலங்கிடமிருந்து,
கற்க எப்போது விழிக்கின்றோம்?
-கெர்சோம் செல்லையா.

Image may contain: outdoor and nature